![]() |
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு தொழில்நுட்ப கட்டிட தொகுதி, தாதிமார் உயர் கற்கை நெறியை தொடர்வதற்கான பூர்வாங்க வேலைத்திட்டத்தினை ஆரம்பிப்பது தொடர்பாகவும், அக்குறனை, மூதூர், கல்முனை போன்ற நகரங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும், மன்னார்- முசலி பிரதேச குடி நீர் விநியோக திட்டம், உன்னிச்சை - மூதூர் குடி நீர் விநியோக திட்டம், மற்றும் பொத்துவில் ஹெத ஓயா நீர் வழங்கல் திட்டம் போன்ற செயற்திட்டங்களை செயற்படுத்த உதவி பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (29) இரவு சஊதி அபிவிருத்தி நிதியத்தின் தவிசாளர் யூசுப் அல் பஸ்ஸாம் அதன் பணிப்பாளர், முகாமையாளர்களை சந்தித்து கொழும்பு கிங்ஸ்போரி ஹோட்டலில் கலந்துரையாடினார்.
இதில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக், வெளிநாட்டு வள திணைக்கள பணிப்பாளர் பிரியந்த பெனான்டோ, கொள்கைத் திட்டமிடல் அமைச்சின் செயலாளர் ரபீக் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் அன்சார், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் நாஜீம் போன்றோர் கலந்துகொண்டனர்.
![]() | ||
|







